தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்

Update: 2022-11-27 12:52 GMT
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கண்ணூர் அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள வடக்கு தெருவில் சாவடி முதல் சோடா கம்பெனி வரை உள்ள கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்