குறுகலான வாறுகால் பாலம் அகலப்படுத்தப்படுமா?

Update: 2022-11-16 12:32 GMT

முக்கூடல் பேரூராட்சி சொக்கலால் தெருவில் புதிதாக அமைக்கப்பட்ட வாறுகால் பாலம் குறுகலாக உள்ளது. இதனால் வாறுகாலில் மழைநீர், கழிவுநீர் நிரம்பி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, வாறுகால் பாலத்தை அகலப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்