குப்பை நிரம்பி வழியும் சாக்கடை

Update: 2022-10-19 10:14 GMT

திருப்பூர் தாராபுரம் ரோடு-காங்கயம் கிராஸ் ரோடு சந்திப்பு பகுதியில் கருப்பராயன் கோவில் உள்ளது. இந்த கோவில் முன்பாக செல்லும் கழிவு நீர் கால்வாய் பராமரிப்பின்றி விடப்பட்டுள்ளது. இதனால் இந்த கால்வாய் முழுவதும் குப்பை நிரம்பி வழிகின்றது. கால்வாய் மண் மூடி காணப்படுவதால் மழை பெய்யும் நேரத்திலும் இங்கு ரோட்டில் மழை வெள்ளம் குளம் போல் தேங்கி விடுகின்றது.இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகவும் சிரமப்பட்டனர். எனவே கால்வாயை தூர்வார வேண்டும் .


------------

மேலும் செய்திகள்