தெருக்களில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2022-10-16 14:17 GMT

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெருவில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் போதிய கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. மேலும் வீடுகளின் வாசல்களில் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்