வடிகால் வசதி வேண்டும்

Update: 2022-10-12 16:41 GMT

தஞ்சையை அடுத்த பூதலூர் மேம்பாலம் பகுதியில் வடிகால் வசதியில்லை. இதனால் அந்த பகுதியில் இருந்து வரும் மழைநீர் நான்கு சாலை வழியாக தஞ்சை சாலையில் வழிந்து என்.வி.நகர் குடியிருப்பு தேங்கி நிற்கிறது. இதனால் மழைநீர் குளம் போல் காட்சி அளிக்கிறது. மேலும் அதனுடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அந்தபகுதியை சேர்ந்த மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்