தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2022-10-12 12:55 GMT

திருவாரூர் காந்தி சாலையில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகாலில் அந்தபகுதியை சேர்ந்த சிலர் உணவு கழிவுகளையும் மற்றும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் கழிவுநீர் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு  உள்ளது.மேலும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்