பயன்படாத கழிவறை

Update: 2022-10-12 10:14 GMT

சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியம் சார்வாய் கிராமத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கழிவறை கட்டப்பட்டது. தற்போது அந்த கழிவறை பயன்பாடு இன்றி செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. மேலும் கழிவறை சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால் விஷப்பூச்சிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவறையை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்

மேலும் செய்திகள்