மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா ஆனைக்குளம் பள்ளிக்கு பின்புறம் உள்ள பாதாள சாக்கடையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. தேங்கிய கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை பிடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடையை அவ்வப்போது தூர்வார சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.