அடிக்கடி வௌியாகும் கழிவு நீர்

Update: 2022-10-02 16:58 GMT

தஞ்சை மருத்துவக்கல்லூரி எதிரில் ஸ்ரீ நகர் கூட்டுறவு காலனி உள்ளது. இந்த பகுதியில் பாதாளசாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பாதாள சாக்கடையில் இருந்து அடிக்கடி கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் ஏற்படுவதோடு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்