தொற்று நோய்கள் பரவும் அபாயம்

Update: 2022-10-01 16:53 GMT

தஞ்சை கீழவீதி பகுதி பொன்னையாபிள்ளை சந்தில்  சாக்கடை கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தேங்கி கிடக்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்