கழிவுநீர் வடிகால் வசதி வேண்டும்

Update: 2022-09-30 16:11 GMT

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை காமராஜ் நகரில் முறையான கழிவுநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையோரத்தில் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கி கிடக்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், மழைக்காலங்களில் கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் கழிவுநீர் வடிகால் வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்