விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை யூனியன் டி.கரிசல்குளம் கிராமத்தில் கழிவுநீர் வாருகால் அமைக்க பள்ளம் தொண்டப்பட்டது. நாட்கள் கடந்தும் தற்போது வரை பணி நிறைவடையாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் நடக்க பாதையின்றி அவதியடைகின்றனர். எனவே பணியை விரைந்து முடித்து சிமெண்டு சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.