கழிவுநீா் கால்வாய் அமைக்க வேண்டும்

Update: 2022-09-30 15:22 GMT

 உளுந்தூர்பேட்டை தாலுகா புகைப்பட்டி கிராமம் காமராஜர் தெருவில் கடந்த ஆறு மாதங்களாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி தேங்கி நிற்கும் கழவுநீரை அகற்றுவதோடு, அங்கு புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்