சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-09-30 10:02 GMT

திருப்பூர் பார்க் ரோட்டில் மாநகராட்சி பூங்கா அருகே செல்லும் கழிவுநீர் கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவு நீரானது பார்க் ரோட்டில் தேங்கி நிற்கிறது. இந்த ரோட்டில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. துர்நாற்றம் வீசும் கழிவுநீர் அபிசேகத்தால் பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகின்றனர். எனவே இங்கு ரோட்டில் கழிவுநீர் தேங்காமல் இருப்பதற்கு மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்