சுகாதார சீர்கேடு

Update: 2022-09-27 15:57 GMT

தஞ்சை பகுதி 32-வது வார்டு நாகை சாலையில் உள்ள அக்ரிநகர் பகுதியில் பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மூக்கை மூடியபடி நடந்து செல்கின்றனர். மேலும், கழிவுநீர் சாலையோரத்தில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இவற்றில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்