தொற்று நோய்கள் பரவும் அபாயம்

Update: 2022-09-27 15:54 GMT

தஞ்சை மாவட்டம் பூதலூர் பஸ் நிலையம் அருகே பழைய பள்ளிவாசல் தெரு உள்ளது. இந்த பகுதியில் கழிவுநீர் வடிகால் வசதி இல்லை. இதன்காரணமாக வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், தேங்கி கிடக்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் கழிவுநீர் வடிகால் வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்