மதுரை அவனியாபுரம் செம்பூரணி பகுதியில் கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் கொட்டப்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உருவாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.