மதுரை மாவட்டம் மேலூர் கோட்டநத்தம்பட்டி விவசாய பாசன கால்வாயில் கழிவுநீர் தேக்கமடைந்து கொசுக்கள் உருவாகி டெங்கு, மலேரியா போன்ற நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் துர்நாற்றமும் வீசுவதால் இப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த கழிவுநீர் கால்வாயினை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.