திருச்சி- மலைக்கோட்டை, வடக்கு உள்வீதி பஜனை மடம் அருகே சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால் மூடி சேதமடைந்த நிலையில் உள்ளது. நடந்து செல்லும் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை சேதமடைந்துள்ள சாக்கடை மூடியின் மீது நடக்கும்போது, சாக்கடைக்குள் விழும் அபாய நிலை உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.