குளத்தில் கழிவு நீர் கலப்பு

Update: 2022-09-13 07:29 GMT

நுள்ளிவிளை ஊராட்சி உட்பட்ட பேயன்குழி ஊரில் அரசு உயர் நிலைப் பள்ளியில் பின் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அருகிலுள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் வந்து கலக்கிறது. இந்த கழிவுநீர் அந்த பகுதியில் உள்ள குளத்தில் கலந்து மாசு அடைந்து வருகிறது. மேலும் மழைநீர் வடிகாலில் சாக்கடை தேங்கி நின்று கொசு உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, ஓடையில் சாக்கடை தேங்கி நிற்காதவாறு பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்