தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-07-12 13:44 GMT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தெற்குதெருவில் பழைய சொசைட்டி கட்டிடம் உள்ளது. இதன் சாக்கடையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தேங்கி நிற்கும் கழிவுநீரை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்