மதுரை சோழையழகுபுரம் இந்திரா நகர் 6- வது குறுக்கு தெரு பகுதியில் கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் நிரம்பி வெளியேறி நடைபாதையில் செல்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் தெருவில் நடந்து செல்ல அவதிப்படுகின்றனர். மேலும் தேங்கிய கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உருவாகி நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.