கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு

Update: 2022-09-06 14:51 GMT

திருச்சி மாநகராட்சி 13-வது வார்டுக்கு உட்பட்ட புதுப்படி சந்து பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் செல்ல வழி இன்றி தேங்கி நிற்கிறது. இதனால் இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்