கடலூர் மஞ்சக்குப்பம் வண்ணாங்குட்டை செல்லும் சாலையில் கழிவு நீர் மழை நீருடன் சேர்ந்து குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். ஆகவே மாநகராட்சி நிர்வாகம் வடிகால் வசதி அமைத்துக் கொடுத்து கழிவு நீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.