தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது ரோடு சாலையில் வாறுகால் வேலை நடைபெற்று வருகிறது. இதனால் தற்போது கழிவுநீர் அனைத்தும் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவதை தடுத்து நிறுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.