சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பாப்பாஊரணி 34-வது வார்டில் தற்போது பெய்த மழையின் காரணமாக தண்ணீர் தேங்கி கிடக்கிறது. சாலையில் தேங்கி தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?