மதுரை மாவட்டம் ஆத்திகுளம் சக்தி மாரியம்மன் கோவில் முன்பு உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் கசிந்து சாலையில் ஓடுகிறது. தேங்கிய கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியினர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.