ராமநாதபுரம் நகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த பாதாள சாக்கடையின் பல்வேறு இடங்களில் உள்ள மூடிகள் உடைந்து உள்ளது. இதனால் கழிவுநீர் சாலையில் வெளியேறி வருகிறது. மேலும் சாலையில் தேங்கிய கழிவுநீரால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே பாதாள சாக்கடை மூடிகளின் உடைப்பை சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.