செங்கல்பட்டு மாவட்டம் பழைய பெருங்களத்தூர், பேட்டை தெருவில் உள்ள கால்வாயில் கழிவுநீர் போக வழியில்லாமல் குப்பைகள் அடைத்துள்ளது. இதனால் கழிவுநீர் தேங்குவதுடன் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் நிலையுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும்.