தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்

Update: 2022-08-23 12:08 GMT
திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், வடக்கு கார் தெரு, புதுத்தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலையோரம் சிறிய அளவில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்கால் தூர்ந்து போனதால் தற்போது கழிவுநீர் செல்ல வழியின்றி தெங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலை சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்