கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2026-08-23 19:28 GMT

திமிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட துர்க்கம் ஊராட்சி வில்வநாதபுரம் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவில் ரூ.3 லட்சத்து 90 ஆயிரத்தில் பேவர் பிளாக் சாலை அமைப்பதாகக் கூறி பொக்லைன் எந்திரத்தை வைத்து ரோட்டை கிளறி விட்டனர். அந்த வேலை தேர்தலின்போது ஆரம்பித்ததால் தேர்தலை காரணம் காட்டி வேலையை நிறுத்தி விட்டனர். தேர்தல் முடிந்ததும் வேலையை ஆரம்பிக்கும்போது சிலர் எங்களுடைய சொந்த இடம் இந்தத் தெருவில் உள்ளது. சரியாக அளந்து ரோடு அமைக்க வேண்டும் எனக் கூறி வேலையை நிறுத்தினர். ஆனால் இன்று வரை சாலை அமைக்கும் பணியை தொடங்கவில்லை. கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை மீண்டும் தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராஜேந்திரன், துர்க்கம்.

மேலும் செய்திகள்