முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1½ வருடத்திற்கு முன்பு மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் பணிகள் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே நிறுத்தப்பட்டது. இதுவரை மேம்பாலம் அமைக்கும் பணிகள் ஏதும் நடைபெறவில்லை. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் சிறு சிறு விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டியது அவசியம்.