குண்டும் குழியுமான சாலை

Update: 2026-08-23 17:58 GMT
ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கானூர் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது. தற்போது சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிளது. இதனால் சிறுமழை பெய்தால் கூட சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதில் வாகனஓட்டிகள் இடறி விழுந்து விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து புதிய சாலை அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்