கோவில்பட்டி இளைய ரசை நந்தல் ரெயில்வே சுரங்கப்பாதை பகுதியில் பள்ளம் விழுந்துள்ளது. இந்த பள்ளத்தில் நீரூற்று சுரந்து கொண்டே இருக்கும். மழை காலங்களில் தண்ணீர் அதிகமாக தேங்கிவிடும். அந்தப் பகுதியை கடந்து செல்லும்போது துர்நாற்றம் வீசுவதுடன், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே இந்த பள்ளத்தை சரி செய்து சுரங்கப்பாதையை சீரமைக்குமாறு வேண்டுகிறேன்.