கிராம மக்கள் அவதி

Update: 2026-08-16 13:24 GMT

கெலமங்கலம் ஒன்றியம் ஏ.செட்டிப்பள்ளி பஞ்சாயத்து மாருதி நகரில் 20-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் உள்ளன. இந்த நகரில் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. இதனால் முதியோர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், கர்ப்பிணிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். சாலை வசதி கோரி கிராம சபை கூட்டத்திலும் இப்பகுதி மக்கள் பல முறை மனுக்கள் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி மாருதி நகருக்கு சாலை வசதி ஏற்படுத்த அதிகாரிகள் முன்வரவேண்டும்.


மேலும் செய்திகள்