பென்னாகரம் முதல் ஆதனூர் வரை இரு வழி சாலையை 4 வழி சாலையாக மாற்றும் வகையில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சாலை விரிவாக்க பணிக்கு குள்ளாத்திரம்பட்டி குட்டையில் இருந்து மண்வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதனால் குட்டை மேடு பள்ளமாக மாறி உள்ளது. எனவே குட்டையை சீரான முறையில் மாற்றி அமைத்து தண்ணீர் தேக்கி வைக்கும் வகையில் சமன் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.