வேடசந்தூர் பாத்திமா நகரில் உள்ள சாலை மண்மேவி காணப்படுகிறது. இதனால் அந்த சாலை தற்போது மண்பாதையாக காட்சியளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்குகிறது. மேலும் சகதிக்காடாக மாறுவதால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.