திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பிச்சம்பட்டி பகுதியில் உள்ள சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் சிதிலமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் சிலர் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.