ஈரோடு ஆர்.என்.புதூர் அருகே அமராவதி நகர் ராகவேந்திரா நகர் பகுதியில் உள்ள தார்சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. ஜல்லிகள் பெயர்ந்து மோசமாக காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்லும் நிலை உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.