பண்ருட்டி அடுத்த திருவதிகையில் உள்ள புதிய கடலூர் சாலையில் ரெயில்வே நகருக்கு எதிரே பெயர் பலகை அமைக்கப்படவில்லை. இதனால் அவ்வழியாக புதிதாக வரும் வாகனஓட்டிகள் வழிதவறி செல்வதால் அவர்கள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே வாகனஓட்டிகளின் நலன் கருதி அதிகாரிகள், பெயர் பலகை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.