சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா கீழச்சூரணம் சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தார்ச்சாலை அமைக்கப்பட்டது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் குடிநீர் குழாய் இணைப்பில் உடைப்பு ஏற்பட்டு அதனை சரி செய்யப்பட்ட நிலையில் குழாய் சரி செய்த அந்த இடத்தில் பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்தை தவிர்க்க பள்ளத்தை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?