அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மூங்கில்பட்டி- கீழ்வாணி மெயின் ரோட்டில் இருந்து ஊருக்குள் செல்லும் சாலை ஜல்லிகற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது புழுதி வாரியை தூற்றுகிறது. இதன் பின்னால் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?