ஈரோடு வெண்டிபாளையத்தில் உள்ள சாலை குண்டும்- குழியுமாக காணப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே குண்டும்-குழியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.