ராமநாதபுரம் மாவட்டம் வண்ணான்குண்டு கிராமத்தில் இருந்து கிருஷ்ணாபுரம், பெரியபட்டினம், திருப்புல்லாணி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலை சேதமடைந்து கரடு முரடாக உள்ளது. சேதமடைந்த சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயமடைவதுடன், விபத்து அபாயமும் உள்ளது. எனவே சேதமடைந்த இச்சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.