பெண்ணாடத்தில் இருந்து திருமலை அகரம், கோனூர், தீவலூர் வழியாக விருத்தாசலம் செல்லும் சாலை குறுகிய நிலையில் உள்ளது. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருவதோடு விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.