மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் பர்லியாறு அருகே தூரிப்பாலம் உள்ளது. இந்த தூரிப்பாலத்தில் கொடிகள் அதிகளவில் படர்ந்து காணப்படுகிறது. இதனால் பாலம் வலுவிழக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து, தூரிப்பாலத்தின் மீது படர்ந்துள்ள கொடிகளை வெட்டி அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் தூரிப்பாலத்தை தொடர்ந்து முறையாக பராமரிக்கவும் முன்வர வேண்டும்.