உத்தமபாளையம் பி.எஸ்.ஆர். நகரில் கடந்த மாதம் சாலையோரத்தில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அதன் பிறகு பணிகள் முடிந்ததும் பள்ளம் முறையாக மூடப்படாமல் விடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சாலை மேடு, பள்ளமாக மாறிவிட்டது. இதன் காரணமாக இரவில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பள்ளத்தை முறையாக மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.