திருச்சி கிழக்கு மாவட்டம் மீன் மார்க்கெட், கிருஷ்ணாபுரம் ரோடு, வாழைக்காய் மண்டி தார் சாலை அமைப்பதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜல்லி கற்கள் சாலையில் கொட்டப்பட்டது. ஆனால் தார்சாலை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பணி கிடப்பில் போடப்பட்டது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார் சாலை அமைத்தனர். இதற்கு இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.