குண்டும், குழியுமான தார் சாலை

Update: 2025-03-09 16:28 GMT

திருச்சி மாவட்டம், முசிறியில் இருந்து தா.பேட்டை செல்லும் சாலையில் சிட்டிலரை கைகாட்டி பிரிவு ரோடு முதல் பெருமாள்பாளையம் கிராமத்திற்கு செல்லும் தார் சாலை சிதிலமடைந்து ஆங்காங்கே பல இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சர் ஆவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பலம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்