குண்டும், குழியுமான தார் சாலை

Update: 2025-03-09 16:07 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்திலிருந்து பூவரசகுடி ஊராட்சிஅழகாம்பாள் புறம் செல்லும் சாலை அமைக்கப்பட்டு, பல ஆண்டுகள் ஆனதால் தற்போது இந்த சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சமந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்